*🙏🏼உடைப்பு :*
¶நட்பு உடைந்து ,
முக நூலானது ...
¶சுற்றம் உடைந்து ,
வாட்சப் ஆனது ...
¶வாழ்த்துக்கள் உடைந்து ,
ஸ்டேட்டஸ் ஆனது ...
¶உணர்வுகள் உடைந்து ,
ஸ்மைலியாய் ஆனது ...
¶குளக்கரை உடைந்து ,
குளியலறை ஆனது ...
¶நெற்களம் உடைந்து ,
கட்டடமானது ...
¶காலநிலை உடைந்து ,
வெப்பமயமானது ...
¶வள நிலம் உடைந்து ,
தரிசாய் ஆனது ...
¶துணிப்பை உடைந்து ,
நெகிழியானது ...
¶அங்காடி உடைந்து
அமேசான் ஆனது ...
¶விளை நிலம் உடைந்து ,
மனை நிலம் ஆனது ...
¶ஒத்தையடி பாதை உடைந்து ,
எட்டு வழியானது ...
¶கடிதம் உடைந்து ,
இ மெயிலானது ...
¶விளையாட்டு உடைந்து ,
வீடியோ கேம் ஆனது ...
¶புத்தகம் உடைந்து ,
இ-புக் ஆனது ...
¶சோறு உடைந்து
'ஓட்ஸ்'சாய்ப் போனது...
¶இட்லி உடைந்து ,
பர்கர் ஆனது ...
¶தோசை உடைந்து ,
பிட்சாவானது ...
¶குடிநீர் உடைந்து
குப்பியில் ஆனது ...
¶பசும்பால் உடைந்து ,
பாக்கெட் ஆனது ...
¶வெற்றிலை உடைந்து ,
பீடாவானது ...
¶தொலைபேசி உடைந்து ,
கைப்பேசியானது ...
¶வங்கி உடைந்து ,
பே டி எம் ஆனது ...
¶நூலகம் உடைந்து ,
கூகுளாய்ப் போனது ...
¶புகைப்படம் உடைந்து ,
செல்ஃபியாய் ஆனது ...
¶பொது நலம் உடைந்து ,
சுய நலமானது ...
¶பொறுமை உடைந்து ,
அவசரமானது ...
¶ஊடல் உடைந்து ,
விவாகரத்தானது ...
"நிரந்தரம் உடைவது நிதர்சனம்... ஆகையால் ,
உடைவது உலகினில்
நிரந்தரமானது " ..!
*தொலைந்துபோன காலம் மீண்டும் தொடருமா...?*